முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 39 ஆவது சபை அமர்வில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட்பதியூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரியும் கண்டனங்கள் வெளியிட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12.08.21 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் க.விஜிந்தன் அவர்களின் நெறிப்படுத்தலில் உப தவிசாளர் தி.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தொடக்கத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த வல்லை நகரசபை தவிசாளர் அவர்களுக்கு அகவணக்க அஞ்சலி செலுத்தி சபை அமர்வுகள் நடைபெற்றன.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் அன்டனி ரங்கதுசார அவர்களினால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
றிசாட்பதியூதின் அவர்களின் வீட்டில் பணி புரிந்த சிறுமியின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சட்டம் நீதியான தீர்ப்பினை வழங்கவேண்டும் என சபையின் உறுப்பினர்களால் ஆதரவு வழங்கப்பட்டு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சபையின் உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன்,த.அமலன் ஆகியோர் கண்டனங்கள் வெளியிட்டுள்ளதுடன் சரியான நீதியான விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளதுடன் தீன்மானத்திற்கு ஆதரவினையும் வழங்கியுள்ளார்கள்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு